இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்காக 30,000 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு!

Date:

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக 30,000 அமெரிக்க டொலர்களை இலங்கை ஒதுக்கியுள்ளது.

இலங்கை அரசாங்கம் 20,000 அமெரிக்க டொலர்களையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 10,000 அமெரிக்க டொலர்களையும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காகவும் ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அவற்றைப் பயன்படுத்துவதற்கும்  ஒதுக்கியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போரால் காசாவில் உள்ள பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்களும் உயிரிழந்துள்ளனர்.

போரில் சிக்குண்டுள்ள இரண்டு இலங்கையர்கள் இன்னமும் கிடைக்கவில்லை.

யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் பட்டியலை இஸ்ரேல் வெளியுற அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலில் சுமார் 8,000 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் முதியோர் இல்லங்களில் பராமரிப்பாளர்களாக உள்ளனர்.

காசா பகுதி மற்றும் லெபனான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவினாலும், நாட்டின் பிற பகுதிகளில் இயல்பு நிலை நீடிப்பதாக இஸ்ரேல் தூதுவர் மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...