இஸ்ரேல் – பலஸ்தீன போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்: மைத்திரி

Date:

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும் பாதுகாப்புச் சபையும் முன்னின்று செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (19) இடம்பெற்ற இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

” இந்தப் போரை நிறுத்த உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒரே நிலைப்பாட்டில் செயல்பட வேண்டும் .

ஐக்கிய நாடுகள் சபையும் பாதுகாப்புச் சபையும் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும். இந்த யுத்தத்தினால் முழு உலகமே அழியும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக வறிய நாடுகள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். எனவே போரை நிறுத்துவதற்கு உலக வல்லரசு நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...