இஸ்ரேல் – பலஸ்தீன போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்: மைத்திரி

Date:

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும் பாதுகாப்புச் சபையும் முன்னின்று செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (19) இடம்பெற்ற இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

” இந்தப் போரை நிறுத்த உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒரே நிலைப்பாட்டில் செயல்பட வேண்டும் .

ஐக்கிய நாடுகள் சபையும் பாதுகாப்புச் சபையும் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும். இந்த யுத்தத்தினால் முழு உலகமே அழியும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக வறிய நாடுகள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். எனவே போரை நிறுத்துவதற்கு உலக வல்லரசு நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...