இஸ்ரேல் பாலஸ்தீன் போர்: உயிரிழந்த இலங்கை பெண்ணின் பூதவுடல் தாயகத்திற்கு!

Date:

இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலில் உயிரிழந்த இலங்கை பிரஜையான அனுலா ரத்நாயக்கவின் பூதவுடல் நாட்டிற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பூதவுடன் நாட்டிற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது.

அனுலா ரத்நாயக்கவின் பூதவுடலை பெற்றுக்கொள்வதற்காக, அவரது உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் விமான நிலைய வளாகத்தில் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் நாட்டிலுள்ள பெண்ணொருவரின் பராமரிப்பு பணிகளுக்காக சென்றிருந்த அனுலா ரத்நாயக்க, கடந்த 7ம் திகதி உயிரிழந்திருந்தார்.

ஹமாஸ் அமைப்பினால் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் அனுலா ரத்நாயக்க உயிரிழந்திருந்ததாக அந்த நாட்டிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்திருந்தது.

ஹமாஸ் அமைப்பின் தாக்குதலிலிருந்து, குறித்த இஸ்ரேல் பெண்ணின் உயிரை காற்றுவதற்கு அனுலா ரத்நாயக்க முயற்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்னாரது இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...