இஸ்லாமிய அறிவுத் துறையில் உச்சம் தொட்ட நம் நாட்டுப் பெண்.

Date:

முதல் முறையாக ரியாதில் அமைந்துள்ள அமீரா நூரா பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை ஹப்ஸா முஹம்மத் பெரோஸ் என்ற பெண்மணி தனது முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
”இமாம் இப்னு ஹஜர் ரஹ் அவர்களின் தஹ்தீபுத் தஹ்தீப் நூலில் இடம்பெறாத இமாம் புகாரியின் அத்தாரீகுல் கபீர் நூலில் இடம்பெற்ற அறிவிப்பாளர்களை ஒன்று திரட்டலும் ஆய்வு செய்தலும்” என்ற தலைப்பில் தனது ஆய்வைச் சமர்ப்பித்திருந்தார்.
இவரது தந்தை முஹம்மத் பெரோஸ் ரியாத் தஃவாக் களத்தில் மிகப் பெரும் பங்காற்றியவர் மாத்திரமின்றி தனது பிள்ளைகளை லௌகீகம் ஆன்மீகம் இரு துறைகளிலும் பரிணமிக்கச் செய்துள்ளார்.

இவரது மூத்த மகள் அல்குர்ஆனை மனனம் செய்த ஒரு வைத்தியர். அவரது கணவனும் மார்க்கப்பற்றுள்ள ஒரு வைத்தியர். ஒரு மகன் பொறியியலாளர். அவரும் அல்குர்ஆனை மனனம் செய்வதில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையில் பல முஸ்லிம் பெண்கள் முதுமாணி கலாநிதிப் பட்டங்கள் பெற்றிருந்தாலும் இஸ்லாமியக் கற்கையில் ஆய்வு சமர்ப்பித்து முதுமாணிப் பட்டம் பெற்றவர் இவராவார்.
May be an image of bread, pie, poster and text

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...