ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதம்: கல்வியமைச்சு பிரகடனம்

Date:

 ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாகக் கல்வியமைச்சு பிரகடனம் செய்துள்ளது.

‘நினைத்த இடத்திற்கு செல்லவும், -வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை எடுக்கவும்’ என்பதே இவ்வருட வாசிப்பு மாதத்திற்கான கருப்பொருளாகும்.

ஒக்டோபர் மாதத்தை வாசிப்பு மாதமாக கல்வியமைச்சு பிரகடனம் செய்துள்ள போதிலும், ஒக்டோபர் 23 முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை பாடசாலை நூலக வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

அதனை 23 ஆம் திகதி பாடசாலை நூலக தினமாகவும், 24 ஆம் திகதி நூலகச் சூழல் சுத்தம் செய்யும் தினமாகவும், 25 ஆம் திகதி நூல்களைப் பாதுகாத்தல் தினமாகவும், 26 ஆம் திகதி நூல் சேகரிப்பு தினமாகவும், 27 ஆம் நாள் நூலகப் பயன்பாட்டு மாணவர்களை கௌரவிக்கும் தினமாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

வாசிப்பு மாதத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் 110 பக்கங்களைக் கொண்ட பாடசாலை நூலக மற்றும் கற்றல்வள நிலையங்களின் திருத்தப்பட்ட ஆலோசனைக் குறியீடொன்றை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...