கரம்பை இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள்!

Date:

சிறுவர் தினத்தை முன்னிட்டு கரம்பை இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் “எல்லாவற்றையும் விட சிறுவர்கள் பெறுமதியானவர்கள்” எனும் மகுட வாசகத்தின் கீழ் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று (2) கரம்பை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நாயக்கர்செனை பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.

பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கரம்பை கிராம அலுவலர் NM.NAWFAL அவர்களும், விஷேட அதிதியாக நாயக்கர்செனை பாடசாலையின் அதிபர் V. Ramanathan அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் கரம்பை சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் V.Rasalingam அவர்கள், கரம்பை இளைஞர் கழக உறுப்பினர்கள், பாலர் பாடசாலையின் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இச் சிறுவர் தின நிகழ்வின் போது பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டதோடு இறுதியில் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

கரம்பை இளைஞர் கழகம்,

Popular

More like this
Related

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...