கொழும்பில் குண்டுத் தாக்குதல் தொடர்பாக உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை!

Date:

கொழும்பில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களின் உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் பேச்சாளாரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதேநேரம் சிறைக் கைதி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில்  உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் 7 இடங்களில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக  ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

கைதி ஒருவர் கொழும்பின் பல பகுதிகளில் குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக  கடிதம் ஒன்றை விட்டுச்சென்றதாகவும் அதில் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும்  இதுவரையில் அவ்விடயம் தொடர்பில் எந்த தகவல்களையும் புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தவில்லை.

கைதி வழங்கிய தகவலுக்கு அமைவாகவே தற்போது உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் இந்த விடயம் தொடர்பில் உறுதிப்படுத்த தகவல்கள் வெளிப்படுத்தப்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...