ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் அழைப்பு மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
தொலைபேசி உரையாடலில், வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், இந்த வெற்றியால் முழு தேசமும் பெருமிதம் கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.