தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு நியமனம்!

Date:

2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நியமனங்களை வழங்க திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக 2518 மாணவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், நாட்டில் நிலவி வரும் நிதி நிலையற்ற தன்மை காரணமாக ஆரம்ப கட்டத்தில் 1000 மாணவர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்க திறைசேரி தீர்மானித்திருந்தது.

பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அரசிடம் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசாங்க தாதியர் சங்கம் தலையிட்டு இது தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு கண்டது.

அரசாங்க தாதியர் சங்கம் சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதியிடம் இது தொடர்பிலான விடையங்களை முன்வைத்ததன் விளைவாக, கடந்த 2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு அனைவருக்கும் நியமனங்களை வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...