தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு நியமனம்!

Date:

2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நியமனங்களை வழங்க திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக 2518 மாணவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், நாட்டில் நிலவி வரும் நிதி நிலையற்ற தன்மை காரணமாக ஆரம்ப கட்டத்தில் 1000 மாணவர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்க திறைசேரி தீர்மானித்திருந்தது.

பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அரசிடம் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசாங்க தாதியர் சங்கம் தலையிட்டு இது தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு கண்டது.

அரசாங்க தாதியர் சங்கம் சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதியிடம் இது தொடர்பிலான விடையங்களை முன்வைத்ததன் விளைவாக, கடந்த 2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு அனைவருக்கும் நியமனங்களை வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...