தேசிய அடையாள அட்டை கட்டணத்தில் திருத்தம்!

Date:

தேசிய அடையாள அட்டையினை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டையின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கட்டணம் நிகழ்நிலை முறைமை ஊடாக சமர்ப்பிக்கும் போது 25 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஆவணங்களை பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையாளர் நாயகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ சமர்ப்பிக்கப்படும்போது 500 ரூபா அரவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கு, முன்னதாக 1000 ரூபாவாக இருந்த கட்டணம் தற்போது 15,000 ரூபாவாக இருக்க வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான ஆண்டுக் கட்டணம் 2,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...