தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரவினால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் சபையுடன் அமைச்சர் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டு அரச சேவையில் இணைந்துகொண்ட விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம தற்போது தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் சிரேஷ்ட உடலியல் நிபுணராக கடமையாற்றி வருகின்றார்.