தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தேசிய நூலகத்தின் இலவச அங்கத்துவம்!

Date:

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய நூலகம் இலவச அங்கத்துவத்தை வழங்கி வருகிறது.

ஒரு வருட காலத்துக்கான இந்த அங்கத்துவம் இன்று முதல் (02) இம்மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பிரிவில் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் 10 – 13 ஆம் தரத்திலான பாடசாலை மாணவர்களும் இந்த அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அங்கத்துவ அட்டைக்காக மட்டும் 200 ரூபா அறவிடப்படும்.

தேசிய நூலகம் பெரும்பாலும் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு பெரிதளவில் உபயோகமாகிறது.

1976 இலிருந்து இன்று வரை வெளியாகிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், அரச வெளியீடுகள், ஆய்வுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் எனப் பல அச்சுப் பிரதிகளையும் அங்கத்தவர்கள் இங்கு பார்வையிட முடியும். திகதிவாரியாகவும் தலைப்பு வாரியாகவும் கூட தாம் உசாவுகின்ற விடயங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். மூன்று மொழிகளிலும் வெளிவந்த பிரசுரங்களை இங்கு சென்று பார்வையிட முடியும்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...