தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தேசிய நூலகத்தின் இலவச அங்கத்துவம்!

Date:

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய நூலகம் இலவச அங்கத்துவத்தை வழங்கி வருகிறது.

ஒரு வருட காலத்துக்கான இந்த அங்கத்துவம் இன்று முதல் (02) இம்மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பிரிவில் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் 10 – 13 ஆம் தரத்திலான பாடசாலை மாணவர்களும் இந்த அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அங்கத்துவ அட்டைக்காக மட்டும் 200 ரூபா அறவிடப்படும்.

தேசிய நூலகம் பெரும்பாலும் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு பெரிதளவில் உபயோகமாகிறது.

1976 இலிருந்து இன்று வரை வெளியாகிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், அரச வெளியீடுகள், ஆய்வுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் எனப் பல அச்சுப் பிரதிகளையும் அங்கத்தவர்கள் இங்கு பார்வையிட முடியும். திகதிவாரியாகவும் தலைப்பு வாரியாகவும் கூட தாம் உசாவுகின்ற விடயங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். மூன்று மொழிகளிலும் வெளிவந்த பிரசுரங்களை இங்கு சென்று பார்வையிட முடியும்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...