தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்க, கட்சிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடல்

Date:

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

“அமைச்சரவையின் கோரிக்கையின் பேரில் நாங்கள் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இன்றைய கூட்டத்தின் முடிவுகளை அமைச்சரவைக்கு அறிவிப்பேன். தற்போதைய அரசாங்கம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுள்ளது” என பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பல கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன,” அதே நேரத்தில் தேர்தல் இரத்து செய்யப்படாது என்பதை பிரதமர் உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கலந்து கொள்ளாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு...

மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு: “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் பாடசாலைகளில் ஆரம்பம்!

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நிலையான சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில், “EduCycle”கழிவு...

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...