தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (16) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு ஜாவத்தை மயானத்தில் ஷாப்டரின் மனைவி வாங்கிய காணியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு தகனம் செய்வது பொருத்தமற்றது என்று பரிந்துரைத்ததை அடுத்து அதை விசாரித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் இந்த வழங்கு மீதான விசாரணையை நடத்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.