நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்: சட்டமா அதிபர்

Date:

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் சார்பில் இன்று உயர்நீதிமன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

சட்டத்தில் பல விதிகள் திருத்தப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் குறித்த திருத்தங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறும் குழுநிலை விவாதத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றும், நாளையும், நாளை மறுதினமும் உயர் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளன.

இன்று இடம்பெற்ற விசாரணைகளின் போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...