பசி, பட்டினியில் துடிக்கும் காசா மக்கள்: உதவி பொருட்களோடு சென்ற எகிப்தின் 70 லொறிகள் நிறுத்தி வைக்கப்பட்டன!

Date:

காசா மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதிக்கு செல்லக்கூடிய மின்சாரம், குடிநீர் மற்றும் எரிபொருள் இணைப்பையும் துண்டித்துள்ளது.

இந்நிலையில் காசாவுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல மற்ற நாடுகள் உதவ வேண்டும் என எகிப்து எதிர்பார்த்திருக்கிறது.

தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 3,000ஐ நெருங்கி வருகிறது. அதேபோல 4,000க்கும் அதிமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் பாதுகாப்பு படை செல்லக்கூடிய மின்சாரம், குடிநீர் மற்றும் எரிபொருள் இணைப்பையும் துண்டித்துள்ளதால் காசா முழுமையாக இருளில் மூழ்கியுள்ளது.

மின்சாரம் இல்லாததால் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியவில்லை. மறுபுறம் எரிபொருள் இல்லாததால் ஆம்புலன்ஸ் சேவையை கூட பயன்படுத்த முடியவில்லை.

மேலும் உதவி பொருட்களை எடுத்து வரும் வாகனங்கள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால் எகிப்தின் உதவி பொருட்கள் கொண்டு வந்த 70 லாரிகள் காசா எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மருந்துகள், குடிநீர், எரிபொருள், உணவு போன்றவை இந்த லாரிகளில் இருக்கின்றன. இதனை காசாவுக்கு அருகே 75 கி.மீ தொலைவில் உள்ள எல் அரிஷ் சர்வதேச விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தால் போதும்.

அங்கிருந்து எப்படியாவது காசாவுக்குள் இதை கொண்டு சென்றுவிடலாம். ஆனால் இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் உதவி பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் மீதும் தாக்குதல்களை தொடுத்திருக்கிறது.

எனவே தன்னுடன் மற்ற நாடுகளும் உதவி பொருட்களை அனுப்பி வைத்தால்தான் இஸ்ரேல் தாக்குதல் நடத்தாமல் இருக்கும் என எகிப்து நம்புகிறது.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...