பாலஸ்தீன தூதுவருடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தூதுக்குழு சந்திப்பு!

Date:

காஸாவில் தொடரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்களுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஜமாஅத்தின் தூதுக் குழுவொன்று அதன் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளியன்று (27) இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் டாக்டர் சுஹைர் எம்.எச். தர் ஸைட். அவர்களை தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியது.

இதன்போது காஸா மற்றும் மேற்குக் கரையின் தற்போதைய நிலைமை குறித்து தூதுக் குழுவினருடன் கலந்துரையாடிய தூதுவர், இந்த சோகத்தின் போது பாலஸ்தீன மக்களுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒருமைப்பாட்டுக்காக நன்றி தெரிவித்தார்.

மேலும், இலங்கை மக்கள் பாலஸ்தீனத்தில் நீதிக்காக தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீன மக்களுடனான அவர்களது ஒருமைப்பாட்டையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இதன்போது தூதுக்குழுவினர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் நகலை தூதுவரிடத்தில் கையளித்தனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...