‘புதியவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும்’: ஆன்மீக பயணங்களை ஆரம்பித்த மஹிந்த

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளுத்கமயில் உள்ள மலை விகாரையொன்றுக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் மாத்திரம் நான்கு விகாரைகளில் முன்னாள் ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

“புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அவர்கள் முன்வந்தால் நாம் முழுயைான ஆதரவை வழங்குவோம். பொதுஜன பெரமுனவுக்கு இளம் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.    நாமே தொடர்ந்து தலைமைத்துவத்தில் இருக்க முடியாது. புதியவர்கள் முன்வர வேண்டும்“ என்றார்.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி சமய நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபட்டு வந்தார்.

குறிப்பாக விகாரைகள், கோயில்கள் உட்பட பல்வேறு மத ஸ்தலங்களில் மஹிந்த ராஜபக்ஷ ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்வார்.

சிறிதுகாலம் அவர் வழிபாடுகளில் ஈடுபடுவதில் இருந்து விலகியிருந்த நிலையில், மீண்டும் அவர் தமது ஆன்மீக பயணங்களை ஆரம்பித்துள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...