மக்களின் மின் கட்டணங்களை செலுத்த முன்வரும் இராஜாங்க அமைச்சர்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த, குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களது மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முன்வந்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வில் நிலுவையாக இருந்த மின்சார கட்டணத்தை சனத் நிசாந்த செலுத்தியிருந்தார்.

இந்த நிலையில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், சனத் நிஷாந்த அமைப்பினால் இந்த மின்சார கட்டணங்கள் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் தங்களது மின்சார பட்டியலின் புகைப்படம் ஒன்றை 0777449492 என்ற whatsapp இலக்கத்திற்கு அனுப்பி வைக்க அல்லது 032 2259130 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கட்டண விபரங்களை தெரிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...