“மனுசத் மிதுரோ” அமைப்பின் ஏற்பாட்டில் இன்று திஹாரியில் இரத்த தான முகாம் ஆரம்பம்!

Date:

நிட்டம்புவ வித்தியானந்த பிரிவென, நிட்டம்புவ நவ வர்த்தக சங்கம், நிட்டம்புவ வித்தியானந்த பௌத்த இளைஞர் இயக்கம், திஹாரிய அமீனிய்யா ஜுமுஆ பள்ளிவாசல் திஹாரிய தன்வீர் அகடமி, நிட்டம்புவ புனித அந்தோனியார் தேவாலயம்,கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ, மற்றும் வியாங்கொடை புனித மரியாள் தேவாலயம் ஆகிய பல்சமய அமைப்புக்களும் நிறுவனங்களும் இணைந்து பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் பலப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் இன்று காலை 9:00 மணி முதல்,
திஹாரிய கண்டி வீதி, அல் அமீனிய்யா ஜுமுஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மகத்தான நிகழ்வில் அனைவரும் கலந்து தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக் கொள்கிறார்கள்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...