முழு உலகத்திலும் உள்ள தங்க கட்டிகளை கொண்டு வந்து தந்தாலும் பாலஸ்தீன புனித பூமியை விட்டுக் கொடுக்க மாட்டேன்: தன் பதவி துரப்புக்கு காரணமாக அமைந்த உதுமானிய பேரரசின் கலீஃபா சுல்தான் அப்துல் ஹமீது அவர்களின் துணிச்சலான முடிவு!

Date:

துருக்கி ஷாதுலிய்யா தரீக்கத்தின் ஷேக் அபு ஷாமத் மஹ்மூது அவர்களுக்கு உதுமானிய பேரரசின் கலீஃபா சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் செப்.22.1913 அன்று எழுதிய கடிதம் இது.

இளம் துருக்கியர் (YOUNG TURKS) அமைப்பின் அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களால் நான் கலீஃபா பதவியை விட்டுவிட்டேன். சியோனிச அமைப்பினரின் கோரிக்கையான பாலஸ்தீனத்தில் யூத அரசை நிறுவுவதற்கு நான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று இந்தக் குழு வலியுறுத்தியது. நான் இந்த முன்மொழிவை நிராகரித்தேன்.

இதற்குப் பகரமாக 150 மில்லியன் பிரிட்டிஷ் தங்க கட்டிகளை வழங்கி உதுமானியப் பேரரசின் வெளிநாட்டு கடன் முழுவதையும் அடைப்பதாக கூறினார். இதையும் நான் நிராகரித்தேன்.

நான் அவர்களிடம் சொன்னேன்: ‘நீங்கள் 150 மில்லியன் பிரிட்டிஷ் தங்கம் அல்ல, உலகம் முழுவதிலும் உள்ள தங்கம் அனைத்தையும் வழங்கினாலும் நான் உங்களுடன் உடன்பட மாட்டேன்.

நான் 30 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம் உம்மத்துக்கு சேவை செய்துள்ளேன். நான் என் முன்னோர்களின் வழியை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன்.
முடிவான எனது இந்த பதிலைத் தொடர்ந்து, அவர்கள் என்னை பதவி நீக்கம் செய்வதை ஒப்புக்கொண்டு என்னை தெசலோனிகிக்கு அனுப்பினர். உதுமானிய அரசு மற்றும் இஸ்லாமிய சமூகத்தில் பாலஸ்தீன நிலங்களில் ஒரு புதிய அரசை நிறுவுவதை நான் ஒருபோதும் ஏற்கவில்லை” என்று கலீஃபா சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...