வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம்!

Date:

நிலவும் சீரற்ற காலநிலையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வைரஸ் காய்ச்சல்கள் மற்றும் டெங்கு உள்ளிட்ட தொற்றுக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடிநீரை சுத்திகரிக்க உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்க்க பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து உணவுக் கடைகளையும் ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டு வருகிறோம்.

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அவர்களின் குடியிருப்பு வளாகங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்”  என்றும் உபுல் ரோஹன பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...