ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Date:

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பயண நேர அட்டவணையில் ஏற்படும் காலதாமதம் தொடர்பில் ஆராயும் வகையில் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் இன்று காலை 9.30 அளவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான போக்குவரத்து தாமதம் காரணமாக நாட்டின் தேசிய விமான சேவைக்கு களங்கம் ஏற்படுத்தப்படுவது குறித்தும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல விமான போக்குவரத்து இரத்து செய்யப்பட்டதுடன், விமான பயண நேர அட்டவணையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இரு விமானங்கள் நேற்றைய தினம் திடீரென இரத்து செய்யப்பட்டன.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேபாளம் மற்றும் மும்பை ஆகியவற்றுக்கு பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானங்களே  இரத்து செய்யப்பட்டன.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...