ஹமாஸ் -இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் : பேச்சுவார்த்தை நடத்தும் கத்தார்!

Date:

பணயக் கைதிகளாக பிடித்து சென்றவர்கள் நிலை என்னவாகும் என்பதுதான் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இஸ்ரேல் பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கத்தார் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஹமாஸ்- இஸ்ரேல் பக்கத்தில் இருந்து இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.தோகா மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகளுடன் கத்தார் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இந்த பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால், காசாவில் தாக்குதலை முடிக்கும் வரை இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு வருமா என்பது தான் சந்தேகம்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...