10 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையில் நேரடி விமான சேவை

Date:

10 வருடங்களுக்குப் பின்னர் துருக்கி ஏர்லைன்ஸ் இலங்கைக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையில் நேரடி விமான சேவையை இன்று ஆரம்பித்துள்ளதாக ஏர்போர்ட் மற்றும் ஏவியேஷன் சர்வீசஸ் (இலங்கை) பிரைவேட் லிமிடெட்  தெரிவித்துள்ளது.

அதன்படி இரு நாடுகளுக்கும் இடையே வாரத்திற்கு நான்கு விமானங்கள் இயக்கப்படும்.

தொடக்க நேரடி விமானம் (TK 730) 261 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அதிகாலை 5.41 மணிக்கு தரையிறங்கியது.

இந்த சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில், முதல் நேரடி விமானம் ஏவியேஷன் சர்வீசஸ்சால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது.

குறித்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் உலகின் தலைசிறந்த தேயிலைக்கு இணையான சிலோன் தேநீர் பரிசுப் பொதிகள் (Ceylon Tea) வழங்கப்பட்டன.

தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு நிகழ்வையும் ஏவியேஷன் சர்வீசஸ் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, ஏவியேஷன் சர்வீசஸ்சின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ. சந்திரசிறி,

இந்த நேரடி விமானச் செயற்பாடுகளின் ஆரம்பமானது எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையை பாரியளவில் மேம்படுத்தும் என்றும், துருக்கிய விமான சேவைகளுடன் ஐரோப்பிய இடங்களை இணைக்க இந்த இணைப்பு முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...