10 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையில் நேரடி விமான சேவை

Date:

10 வருடங்களுக்குப் பின்னர் துருக்கி ஏர்லைன்ஸ் இலங்கைக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையில் நேரடி விமான சேவையை இன்று ஆரம்பித்துள்ளதாக ஏர்போர்ட் மற்றும் ஏவியேஷன் சர்வீசஸ் (இலங்கை) பிரைவேட் லிமிடெட்  தெரிவித்துள்ளது.

அதன்படி இரு நாடுகளுக்கும் இடையே வாரத்திற்கு நான்கு விமானங்கள் இயக்கப்படும்.

தொடக்க நேரடி விமானம் (TK 730) 261 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அதிகாலை 5.41 மணிக்கு தரையிறங்கியது.

இந்த சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில், முதல் நேரடி விமானம் ஏவியேஷன் சர்வீசஸ்சால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது.

குறித்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் உலகின் தலைசிறந்த தேயிலைக்கு இணையான சிலோன் தேநீர் பரிசுப் பொதிகள் (Ceylon Tea) வழங்கப்பட்டன.

தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு நிகழ்வையும் ஏவியேஷன் சர்வீசஸ் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, ஏவியேஷன் சர்வீசஸ்சின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ. சந்திரசிறி,

இந்த நேரடி விமானச் செயற்பாடுகளின் ஆரம்பமானது எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையை பாரியளவில் மேம்படுத்தும் என்றும், துருக்கிய விமான சேவைகளுடன் ஐரோப்பிய இடங்களை இணைக்க இந்த இணைப்பு முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...