2024 வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இராஜாங்க அமைச்சர்

Date:

எரிபொருள் தட்டுப்பாடுக்கு இடமில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்..

2024 ஜூன் வரை எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டெண்டர்கள் நிறைவடைந்துள்ளதாகவும், அதுவரை தடையில்லா எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சீனாவின் சினோபெக் நிறுவனத்திடம் எரிபொருள் விநியோகத்தை ஒப்படைப்பதன் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை சேமிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும்  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...