2024 வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இராஜாங்க அமைச்சர்

Date:

எரிபொருள் தட்டுப்பாடுக்கு இடமில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்..

2024 ஜூன் வரை எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டெண்டர்கள் நிறைவடைந்துள்ளதாகவும், அதுவரை தடையில்லா எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சீனாவின் சினோபெக் நிறுவனத்திடம் எரிபொருள் விநியோகத்தை ஒப்படைப்பதன் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை சேமிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும்  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...