9 மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் 23,000 முறைப்பாடுகள்: பெண்களிடமிருந்தே அதிகம்!

Date:

இவ்வாண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் பேஸ்புக் தொடர்பான 23,534 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவற்றில் 70 வீதமானவை பெண்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

” வேலை வழங்குவதாக கூறி இணையத்தில் செய்யும் மோசடிகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கு அடுத்தபடியாக இணையத்தில் செய்யப்படும் பிரமிட் மோசடிகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும், போலி ஃபேஸ்புக் கணக்குகளை உருவாக்கி, ஃபேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்வதாகவும் புகார்கள் உள்ளன.

இவற்றில் கடந்த மே மாதத்தில் 3328  பேஸ்புக் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை 101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொண்டு தெரிவிக்க முடியும்.” எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...