வடக்கு காசாவில் உள்ள சன தொகை மிகுந்த ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் காசாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் போராளிகளின் அறிவிக்கப்படாத தாக்குதலில் சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம், எரிபொருள் அல்லது மனிதாபிமான உதவி எதுவும் இல்லை என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.