ஆறு மாதத்தில் அல் குர்ஆனை மனனம் செய்த குச்சவெளி ஹஸ்மத் பானு!

Date:

காசிம் நகர் குச்சவெளி 3ஐ சேர்ந்த அப்துல் கரீம் ஹக்குல் முபீன் மற்றும் ஹம்சா நஜ்மியா ஆகியோரின் செல்வப் புதல்வியான ஹஸ்மத் பானு தனது 13 ஆவது வயதில் ஆறு மாத காலத்தில் முழுக் குர்ஆனையும் முறையாக மனனம் செய்து சாதனை படைத்துள்ளார்.

புத்தளம், மதுரங்குளி விருதோடையில் அமைந்திருக்கும் அல் ஜாமியத்துல் அஸீஸியா அரபுக்கல்லூரியின் ஆன்மீகத் தலைவரும் பன்னூல் ஆசிரியருமான அல்ஹாபிழ் அப்ழலுல் உலமா அஷ்ஷெய்யத் அப்துல் அஸீஸ் மெளலானா அவர்களின் தலைமையில், அல் ஹாபிழ் அல் ஆலிம் முஹம்மது ஆரிப் (அல் அஸீஸீ) மற்றும் அல் ‘ஹாபிழா அல் ஆலிமா தஸ்லிமா பர்வீன் (அல் அஸீஸியா ஆகிய இருவர்களின் சிறப்பான நேரடி வழிகாட்டுதலின் கீழ் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.

இச்சாதனையைக் கெளரவிக்கும் முகமாக அம்மாணவி இலவசமாக புனித உம்ரா செல்வதற்கும் கல்லூரி ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

Popular

More like this
Related

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிடிகம லசா’...

பேருவளையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித்-அல்-அப்ரார் பள்ளிவாசலை பார்வையிட்டார் பிரிட்டன் தூதுவர்.

இலங்கையின் மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் பேருவளையில் அமைந்துள்ள மஸ்ஜித்-அல்-அப்ரார்...

ஹிப்ழ் மற்றும் கிதாப் மத்ரஸா மாணவர்களுக்கான 2 நாள் ஊடகப் பயிற்சி நெறி

ஹிப்ழ் மற்றும் கிதாப் மத்ரஸா மாணவர்களுக்கான 2 நாள் ஊடகப் பயிற்சி...

நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு...