இஸ்ரேல் – பலஸ்தீன போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்: மைத்திரி

Date:

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும் பாதுகாப்புச் சபையும் முன்னின்று செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (19) இடம்பெற்ற இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

” இந்தப் போரை நிறுத்த உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒரே நிலைப்பாட்டில் செயல்பட வேண்டும் .

ஐக்கிய நாடுகள் சபையும் பாதுகாப்புச் சபையும் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும். இந்த யுத்தத்தினால் முழு உலகமே அழியும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக வறிய நாடுகள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். எனவே போரை நிறுத்துவதற்கு உலக வல்லரசு நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...