இஸ்ரேல் – பாலஸ்தீன போர்: பாராளுமன்றில் விவாதம் நடத்தப்படும்- சபாநாயகர் அறிவிப்பு

Date:

இரஸ்ரேல் -ஹமாஸ் அமைப்புக்கும்  இடையில் இடம்பெற்றுவரும் போர் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த விவகாரம் தொடர்பில் விவாதம் நடத்தப்படுமென சபாநாயகர் பதிலளித்தார்.

இதன்போது இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போரில் தீவிரவாதிகளாலும் மக்கள் கொல்லப்படுவதுடன், அரச பயங்கரவாதத்தாலும் மக்கள் கொல்லப்படுகின்றனர்.

இதனால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோரும் இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

விவாதம் நடத்துவதன் ஊடாக போர் காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சபைக்கு அறிவிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பலரது கோரிக்கையின் பிரகாரம் சபையில் இதுகுறித்து விவாதம் நடத்தப்படுமென சபாநாயகர் அறிவித்தார்.

 

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...