ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு நாளை!

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் முகமாக நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

இவ்வருட மாநாட்டில் கட்சியின் அரசியலமைப்பில் சில விசேட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை இலகுவாகக் கட்டியெழுப்பக்கூடிய அரசியல் கட்சியாக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசியலமைப்பு மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பழமையான அரசியல் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி, இந்த விசேட பொது மாநாட்டை நடாத்துவதாகவும், கடந்த கால சவால்களை வென்றது போன்று எதிர்கால சவால்களையும் வெற்றிகொள்ளும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...