தரக்குறைவான மருந்துகளால் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

Date:

தரக்குறைவான மருந்துகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

“தரக்குறைவான மருந்துகளை பாவிப்பதனால் நோய் நிலைமைகள் மோசமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இலவச சுகாதார சேவையில் மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதால், அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது.

போதைப்பொருள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையானது மோசடிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தற்போதைய சுகாதார அமைச்சரின் காலம் இந்த நாட்டில் சுகாதார சேவையில் மிகவும் வினைத்திறன் அற்ற காலகட்டம்“ எனவும் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...