தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்க, கட்சிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடல்

Date:

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

“அமைச்சரவையின் கோரிக்கையின் பேரில் நாங்கள் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இன்றைய கூட்டத்தின் முடிவுகளை அமைச்சரவைக்கு அறிவிப்பேன். தற்போதைய அரசாங்கம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுள்ளது” என பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பல கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன,” அதே நேரத்தில் தேர்தல் இரத்து செய்யப்படாது என்பதை பிரதமர் உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கலந்து கொள்ளாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...