நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்: சட்டமா அதிபர்

Date:

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் சார்பில் இன்று உயர்நீதிமன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

சட்டத்தில் பல விதிகள் திருத்தப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் குறித்த திருத்தங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறும் குழுநிலை விவாதத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றும், நாளையும், நாளை மறுதினமும் உயர் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளன.

இன்று இடம்பெற்ற விசாரணைகளின் போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...