படுகொலை செய்யப்பட்ட பலஸ்தீனர்களுக்காக காஇபான ஜனாஸா தொழுகை நடத்துங்கள் – உலமா சபை வேண்டுகோள்

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகளின் தலைவர், செயலாளர் மற்றும் அனைத்து பள்ளிவாயல் நிர்வாகிகளுக்குமான  வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன் மற்றும் காஸாவில் நிகழ்த்தப்படுகின்ற மனிதாபிமானமற்ற இனப்படுகொலைகளாலும் அல்-அஹ்லி அரபு வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாலும் ஒட்டுமொத்தமாக 4000 க்கும் மேற்பட்டோர் ஷஹீதாக்கப்பட்டுள்ளதோடு பல்லாயிரக் கணக்கானோர் படுகாயமடைந்திருப்பதையும் நாம் அறிவோம். அதில் பெரும்பான்மையானவர்கள், குழந்தைகளும் பெண்களும் வயோதிகர்களும் ஆவார்கள்.

இதுபோன்ற நிகழ்வுகளின் போது மரணிக்கும் எமது சகோதரர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதும் அவர்களுக்காக மறைவான ஜனாஸாத் தொழுகை நடாத்துவதும் இஸ்லாமிய வழிகாட்டலாகும்.

‘மறைவான (G-ஙாஇப்) ஜனாஸாத் தொழுகையை, ஒருவர் ஒரு தினத்தில் அன்று மரணித்தவர்களுக்காக அல்லது அவ்வருடம் மரணித்தவர்களுக்காக தொழுவது ஸுன்னத்தாகும்’ என ஷாபிஈ மத்ஹபுடைய மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே இத்தாக்குதலில் மரணித்தவர்களுக்காக மறைவான (G-ஙாஇப்) ஜனாஸா தொழுகை நடாத்தி, அதனைத் தொடர்ந்து பலஸ்தீனில் அமைதி நிலவவும் முஸ்லிம்களின் உயிர், உடைமைகள் பாதுகாக்கப்படவும் வல்ல அல்லாஹ்விடம் உதவி வேண்டி அனைவரும் ஒன்றுசேர்ந்து துஆ பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு   அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...