பிரபல அறிவிப்பாளர் உவைஸ் ஷெரீப் காலமானார்!

Date:

அனுராதபுரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட
பிரபல அறிவிப்பாளரும் அனுராதபுரம் ஸாஹிரா பாடசாலையின் பழைய மாணவருமான அல்-ஹாஜ் கலை நிலா உவைஸ் ஷெரீப் அவர்கள் இன்று (04) காலமானார்.

அன்னார் மர்ஹூம் சுல்தான் மொஹிதீன் (Town ஆராச்சியார்) அவர்களின் மகனும் நவாசியா வின் கணவரும் ஸஹ்ரான் மற்றும் சாஹிலாவின் தந்தையும் மர்ஹூம் ஜெய்னுலாப்தீன்(ஓய்வுபெற்ற அதிபர்), துவான் தர்விஸ், நெய்மா,சித்தி நிசெளசியா (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோரின் சகோதரரும் மொஹமட் அலி மொஹமட் டில்ஷான் (நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர்),பஸீல், ஆகியோரின் தாய் மாமாவுமாவார்.

அன்னார் Star tv/ Radio Ceylon போன்ற பிரபல ஊடகங்களிள் அறிவிப்பாளராக கடமையாற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அன்னாரின் பிறந்த ஊரான அனுராதபுரத்திற்கு செய்யும் சேவையாக கருதி அனுராதபுரம் ஜனாஸா சேவை சங்கத்தின் ஜனாஸா அறிவிப்புக்களை அவரது அலகியா குரலில் குரல் பதிவாக மாற்றி பதிவிட்டு வந்தார்.

அன்னாரது ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் கொழும்பில் நல்லடக்கம் செய்யப்படும்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...