மக்களின் மின் கட்டணங்களை செலுத்த முன்வரும் இராஜாங்க அமைச்சர்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த, குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களது மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முன்வந்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வில் நிலுவையாக இருந்த மின்சார கட்டணத்தை சனத் நிசாந்த செலுத்தியிருந்தார்.

இந்த நிலையில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், சனத் நிஷாந்த அமைப்பினால் இந்த மின்சார கட்டணங்கள் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் தங்களது மின்சார பட்டியலின் புகைப்படம் ஒன்றை 0777449492 என்ற whatsapp இலக்கத்திற்கு அனுப்பி வைக்க அல்லது 032 2259130 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கட்டண விபரங்களை தெரிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...