அரசியலமைப்பு பேரவை தொடர்பில் சர்ச்சை கருத்து: சஜித்தின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் சபாநாயகர்

Date:

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பேரவைத் தலைவர் என்ற முறையில் தாம் அதைச் செய்வதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் தாமதங்கள் குறித்து ஆராய ஒரு தெரிவுக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

“நான் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதி, அவரது கருத்து குறித்து அரசியலமைப்பு பேரவையின் நிலைப்பாட்டை விளக்குவேன்.” என்றும் சபாநாயகர் வலியுறுத்தினார்.

அத்துடன், பொலிஸ்மா அதிபர் மற்றும் இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களின் அங்கீகாரம் தொடர்பான விடயங்கள் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் உறுதியளித்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...