அரச ஊழியர்களுக்கு 20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் போராட்டம்!

Date:

அரச ஊழியர்களுக்கு 20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் நாளை மறுதினம் (27) அரச ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் பிரதி செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள அரச நிறுவனங்களுக்கு முன்பாக 27ஆம் திகதி போராட்டம் நடத்தப்படும். கொழும்பில் உள்ள பொது நிர்வாக அமைச்சுக்கு முன்பாக பிரதான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தன சூரியஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா கொடுப்பனவு அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள பின்புலத்திலேயே இவ்வாறு அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றியம் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...