அரச ஊழியர்களுக்கு 20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் போராட்டம்!

Date:

அரச ஊழியர்களுக்கு 20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் நாளை மறுதினம் (27) அரச ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் பிரதி செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள அரச நிறுவனங்களுக்கு முன்பாக 27ஆம் திகதி போராட்டம் நடத்தப்படும். கொழும்பில் உள்ள பொது நிர்வாக அமைச்சுக்கு முன்பாக பிரதான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தன சூரியஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா கொடுப்பனவு அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள பின்புலத்திலேயே இவ்வாறு அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றியம் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...