இதுவரை 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக தகவல்!

Date:

இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 109 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண ரயில் பாதைகளில் 50 ரயில்கள் தடம் புரண்டுள்ளதுடன், ரயில் நிலையங்களில் 59 ரயில்கள் தடம் புரண்டுள்ளன.

இது தொடர்பில் ரயில்வே துணை பொது மேலாளர் என். ஜே. இதிபோலகே சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

புகையிரதப் பாதையின் சட்டவிதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் புகையிரத நிலையங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளே இவ்வாறு ரயில்கள் தடம் புரண்டதற்கு முக்கியக் காரணம்.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடத்தில் புகையிரத கடவைகளில் வாகனங்கள் புகையிரதங்களில் மோதி விபத்துக்குள்ளான 61 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்துகளினால் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 62 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் 353 பேர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த விபத்துகளில் தற்கொலை முயற்சிகள், பாதுகாப்பற்ற ரயில்வேயில் பயணம் செய்தல், கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தி ரயில் பாதைகளில் பயணம் செய்தல் போன்றவை அதிகம் பதிவாகியுள்ளன.

ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக 154 பேர் உயிரிழந்துள்ளதுடன் 203 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...