இதுவரை 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக தகவல்!

Date:

இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 109 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண ரயில் பாதைகளில் 50 ரயில்கள் தடம் புரண்டுள்ளதுடன், ரயில் நிலையங்களில் 59 ரயில்கள் தடம் புரண்டுள்ளன.

இது தொடர்பில் ரயில்வே துணை பொது மேலாளர் என். ஜே. இதிபோலகே சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

புகையிரதப் பாதையின் சட்டவிதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் புகையிரத நிலையங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளே இவ்வாறு ரயில்கள் தடம் புரண்டதற்கு முக்கியக் காரணம்.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடத்தில் புகையிரத கடவைகளில் வாகனங்கள் புகையிரதங்களில் மோதி விபத்துக்குள்ளான 61 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்துகளினால் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 62 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் 353 பேர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த விபத்துகளில் தற்கொலை முயற்சிகள், பாதுகாப்பற்ற ரயில்வேயில் பயணம் செய்தல், கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தி ரயில் பாதைகளில் பயணம் செய்தல் போன்றவை அதிகம் பதிவாகியுள்ளன.

ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக 154 பேர் உயிரிழந்துள்ளதுடன் 203 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...