இதுவரை 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக தகவல்!

Date:

இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 109 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண ரயில் பாதைகளில் 50 ரயில்கள் தடம் புரண்டுள்ளதுடன், ரயில் நிலையங்களில் 59 ரயில்கள் தடம் புரண்டுள்ளன.

இது தொடர்பில் ரயில்வே துணை பொது மேலாளர் என். ஜே. இதிபோலகே சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

புகையிரதப் பாதையின் சட்டவிதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் புகையிரத நிலையங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளே இவ்வாறு ரயில்கள் தடம் புரண்டதற்கு முக்கியக் காரணம்.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடத்தில் புகையிரத கடவைகளில் வாகனங்கள் புகையிரதங்களில் மோதி விபத்துக்குள்ளான 61 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்துகளினால் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 62 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் 353 பேர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த விபத்துகளில் தற்கொலை முயற்சிகள், பாதுகாப்பற்ற ரயில்வேயில் பயணம் செய்தல், கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தி ரயில் பாதைகளில் பயணம் செய்தல் போன்றவை அதிகம் பதிவாகியுள்ளன.

ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக 154 பேர் உயிரிழந்துள்ளதுடன் 203 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...