இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில், 485 எச்.ஐ.வி நோயாளர்கள்!

Date:

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 485 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தை காட்டிலும், இந்த வருடத்தில் அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதான பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

2022ம் ஆண்டில் 425 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட எச் ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.

உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் எச்.ஐ.வி நோய் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம் என வைத்தியர் ஜானகி விதான பத்திரன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 68 ஆயிரத்து 700 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அவர்களில், 25 சதவீதமானவர்கள், சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...