இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் மாயம்!

Date:

மின்னேரியா மற்றும் வக்கமுல்ல பகுதிகளில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அப்பகுதிகளுக்கான பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி மின்னேரியா குளத்திலிருந்து கந்தளே ஏரிக்கு நீர் செல்லும் கால்வாயில் நீராடச் சென்ற 37 வயதான அத்துரலிய, யஹலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, வக்கமுல்ல, வீரகெடிய, ஊருபோகுஓயே அணையின் மீது நடந்து சென்ற 40 வயதுடைய நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இவர் வக்கமுல்ல, ஹகுருவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...