இஸ்ரேலிலுள்ள தனது தூதுவரை வெளியேற்றியது ஜோர்டான்!

Date:

காசா மீதான போரை நிறுத்த வலியுறுத்தி வரும் ஜோர்டான், இஸ்ரேலிலுள்ள தனது நாட்டு தூதுவரை வெளியேறுமாறு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் போரை நிறுத்தி “அது ஏற்படுத்திய மனிதாபிமான நெருக்கடியை” முடிவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே தூதுவர் டெல் அவிவ் திரும்புவார் என்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சு மேலும் கூறியது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வெளியேறிய ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதுவர் அதே நிபந்தனைகளின் பேரில் மட்டுமே திரும்ப அனுமதிக்கப்படுவார் என்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை காசா மீதான தாக்குதல்களால் பொலிவியா இஸ்ரேலுடனான உறவை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருகிவரும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாகவும் காசா மீதான அளவில்லாத தாக்குதலாலும் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக பொலிவியா நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...