இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிப்பு; காஸாவில் தொடரும் மனிதாபிமான உதவிகள்

Date:

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் ஏழாவது நாளாகவும் நீடிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்ததுக்கான ஒப்பந்தம் நிறைவடைவதற்கான சில நிமிடங்களுக்கு முன்னதாக போர் நிறுத்தம் மேலும் தொடரும் என்று இருதரப்பும் தெரிவித்துள்ளது.

பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான மத்தியஸ்தர்களின் தொடர் செயல்பாட்டு முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களின்படி போர் இடைநிறுத்தம் தொடர்கிறது என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஏழாவது நாளைக்கு போர் நிறுத்தம் நீடிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று ஹமாஸ் தரப்பும் தெரிவித்துள்ளது.

இன்றுடன் போர் நிறுத்தம் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால், போர் நிறுத்தத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பது குறித்து கத்தாரில் இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் உயர் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வந்ததன் பலனாகவே இன்று மீணடும் போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் எட்டு வாரங்களுக்கு பின்னர் இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...